2வது நாளாக கொட்டி தீர்த்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி...

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து 2 நாட்கள் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
2வது நாளாக கொட்டி தீர்த்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி...
x
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று 3 மணிநேரத்துக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று காலை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில், மாலையில் மீண்டும் கருமேகம் திரண்டு, கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் உக்கிரத்தில் தவித்து வந்த  அம்மாவட்ட மக்கள், அடுத்தடுத்து 2 நாட்கள் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே, தொடர் மழையால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்