முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி - தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்
ராஜபாளையத்தை அடுத்த சத்திரபட்டியில், கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜபாளையத்தை அடுத்த சத்திரபட்டியில், கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக முதற்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இரண்டு மணி நேரமாக நடைபெற்ற முத்தரப்பு முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனையடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
Next Story