அடிபட்டு கிடந்த பெரிய ஆந்தை - தகவல் அளித்தும் வராத வனத்துறை

சின்னாளபட்டி அருகே உள்ள அம்பாத்துரை ரயில் நிலையம் அருகே பெரிய ஆந்தை ஒன்று அடிபட்டுக் கிடந்தது.
x
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள அம்பாத்துரை ரயில் நிலையம் அருகே  பெரிய  ஆந்தை ஒன்று அடிபட்டுக் கிடந்தது. காகங்கள் கூட்டமாக வந்து ஆந்தையை கொத்தியதை பார்த்த பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் வரவில்லை. இந்நிலையில் அம்பாத்துரை ரயில்வே கேட் அருகே  நடிகர் கதிர்  நடிக்கும் "சர்பத்" என்ற படத்தின் சண்டைக் காட்சிக்கான சினிமா ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அங்கு வந்த நடிகர் கதிர் ஆந்தையின் இறக்கையை பிடித்தபடி செல்பி எடுத்துக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்