ஜல்லிக்கட்டு காளைக் கன்றுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

காளையை அலங்கரித்து, கேக்வெட்டி அசத்திய சிறுவர்கள்
ஜல்லிக்கட்டு காளைக் கன்றுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்
x
ஜல்லிக்கட்டு காளை கன்றுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடி கிராமத்து சிறுவர்கள் அசத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைத்தால் அலங்காநல்லூர் கிராம கோவிலுக்கு காளைக் கன்று வாங்கி வளர்ப்பது என அப்பகுதி சிறுவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த ஆண்டு காளை கன்று வாங்கி கருப்பன் என பெயர் சூட்டி வளர்த்து வருகின்றனர். தற்போது 2 வயதான அந்த காளைக் கன்றுக்கு அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதற்காக காளை கன்றுவை சிறப்பாக அலங்கரித்து கொண்டு வந்தது அப்பகுதி  மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்