மதுரை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நாகராஜன், இன்று பொறுப்பேற்று கொண்டார்.
x
மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நாகராஜன், இன்று பொறுப்பேற்று கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அவர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் செயலாளராக பணிபுரிந்தவர். இதனிடையே மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய நடராஜன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதவியேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 

Next Story

மேலும் செய்திகள்