இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வேலூரில் உள்ள விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தினர்.
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை
x
புகழ்பெற்ற சி.எம்.சி. மருத்துவமனையில் வடமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினர் சிகிச்சை பெற வருவது வழக்கம். அந்த வகையில், மருத்துவமனையை சுற்றியுள்ள காந்திரோடு, பாபுராவ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரின் பாஸ்போர்ட்டுகளை சோதனை செய்ததுடன், விவரங்களையும் சேகரித்தனர். வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம் உட்பட மாவட்டம் முழுவதிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்