பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் உத்தரவு

பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 66 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பொன்.மாணிக்கவேல் விளம்பர நோக்கில் செயல்பட்டு வருவதாக மனுவில் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த மனு மீதான இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், காவல்துறை அதிகாரிகளின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Next Story

மேலும் செய்திகள்