கோவில் திருவிழாவில் தகராறு... சாலை மறியல்... நள்ளிரவில் பரபரப்பு

கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
x
கோவில் திருவிழாவில் தகராறு  ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கரூர் மாவட்டம், நானபரப்பு மாரியம்மன் கோவில் திருவிழாவின் இறுதி நாளில், மஞ்சள் நீர் கம்பம், காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு மதத்தினர் வசிக்கும் தெரு வழியாக சென்றபோது, அங்குள்ள சிலர் மீது மஞ்சள் நீர் பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால், போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, போலீஸார் மீது கற்கள் வீசப்பட்டது. இதையடுத்து, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்