பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மணிமுத்தாறு 9-வது பட்டாலியன் காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுகொண்டு தற்கொலை.
x
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் அஜின் ராஜ். மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியனில் பணிபுரிந்து வந்த இவர்,  இன்று காலை கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 21 நாட்களாக விடுப்பில் இருந்த அஜின் ராஜ், இன்று தான் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் போலீசார் தற்கொலை சம்பவங்கள், காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. காவலர் அஜின் ராஜ் தற்கொலை சம்பவம் குறித்து கோதையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்