என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில் சோதனை

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
x
புதுச்சேரி மாநிலத்தில், மக்களவை மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், திலாஸ்பேட்டையில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில், 5 பேர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில், வீடு முழுவதும் உள்ள அறைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை, சுமார் அரை மணி நேரம், பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனை முடிந்து, தேர்தல் பறக்கும் படையினர் சென்ற உடன், வருமானவரித்துறையினரும் அங்கு வந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்