கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் தொடக்கம்...

தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் துவங்கியது.
கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் தொடக்கம்...
x
வரும் 19ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் துவங்கியது. மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்குவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். 

சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் காலை 10.30 மணிக்கு விண்ணப்பம் வினியோகம் துவங்கியது. காலை முதலே சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்களை வாங்கி வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பி.காம்.,  படிப்பில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருவதால் வழக்கம் போல் இந்த ஆண்டும் பி,காம் படிப்பிற்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்