"யார் தடுத்தாலும் எட்டு வழிச்சாலை அமையும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை- சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை அமைய, மக்கள் விரும்பினால், யார் தடுத்தாலும், அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
x
சென்னை- சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை அமைய, மக்கள் விரும்பினால், யார் தடுத்தாலும், அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார். கிருஷ்ணன்கோவில் பகுதியில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்குசேகரித்த போது பேசிய அவர், சிலரின் தூண்டுதலால் இந்த திட்டத்தை மக்கள் எதிர்ப்பதாக கூறினார். மேலும், கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தால் மீனவர்கள் உட்பட 20 லட்சம் மக்களின் வாழ்வு மேம்படும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்