தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை நிறைவு
காரைக்குடி அடுத்த பள்ளத்தூரில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கமான தொழிலதிபர் படிக்காசு வீட்டில் நடந்த வருமான வரி சோதனை நிறைவுபெற்றது.
காரைக்குடி அடுத்த பள்ளத்தூரில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கமான தொழிலதிபர் படிக்காசு வீட்டில் நடந்த வருமான வரி சோதனை நிறைவுபெற்றது. மதுரையைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். எந்தவித ஆவணங்களும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், படிக்காசு வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட11 லட்சம் பணத்திற்கு, உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால், அந்த பணம் மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story