இந்த தேர்தல் நாட்டை மோடியிடம் இருந்து காப்பாற்றக் கூடிய தேர்தல் - கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தீத்தம்பட்டி, அச்சன்குளம், காமநாயக்கன்பட்டி மற்றும் கோவில்பட்டி நகரில் உள்ள வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
x
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தீத்தம்பட்டி, அச்சன்குளம், காமநாயக்கன்பட்டி மற்றும் கோவில்பட்டி நகரில் உள்ள வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டதாகவும்,  பலர்  வேலை இழந்து தவிப்பதாகவும் தெரிவித்தார்.  தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலை இல்லை என்ற நிலை உருவாகி உள்ளதாகக் கூறிய கனிமொழி, தீப்பெட்டி தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்தத் தேர்தல், மோடியிடம் இருந்தும், எடப்பாடியிடம் இருந்தும் நாட்டை காப்பாற்றக் கூடியது என கனிமொழி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்