துடியலூர் சிறுமி கொலை - "தகவல் தெரிவித்தால் சன்மானம்"

கோவை பன்னிமடை அருகே 6 வயது சிறுமி கொலை வழக்கில் கூடுதலாக அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு, தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
x
கோவை பன்னிமடை அருகே தெருவில் விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து வழக்கில் ஏற்கனவே டிஎஸ்பி தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது கூடுதலாக 4 ஆய்வாளர்கள், 2 ஏடிஎஸ்பிக்கள் வழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மேற்கு மண்டல் ஐ.ஜி பெரியய்யா தலைமையில், இந்த வழக்கு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கூடுதல் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக பள்ளி மாணவன் உட்பட 6 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்