சீறிப்பாய்ந்த காளைகள், விரட்டி பிடித்த வீரர்கள் : தேர்தல் விதிமுறை காரணமாக தடைபட்ட பரிசு

கரடிப்பட்டியில் தொட்டியத்து சின்னையா கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
சீறிப்பாய்ந்த காளைகள், விரட்டி பிடித்த வீரர்கள் : தேர்தல் விதிமுறை காரணமாக தடைபட்ட பரிசு
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கரடிப்பட்டியில் தொட்டியத்து சின்னையா கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட 190 காளைகளை நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் அடக்கினர்.இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளுக்கும், எந்த வித பரிசுப் பொருட்களும் வழங்கப்படவில்லை.இதனால் மாட்டின் உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.100 சதவீத வாக்குபதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான விளம்பர பதாகைகள் வாடிவாசல் அருகே வைக்கப்பட்டிருந்தன

Next Story

மேலும் செய்திகள்