சுயேட்சையாக முதல் வேட்பாளர் மனுத்தாக்கல் - வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம்

விவசாயி தேவப்பா என்பவர் முதல் வேட்பாளராக சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்
சுயேட்சையாக முதல் வேட்பாளர் மனுத்தாக்கல் - வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம்
x
ஒசூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு, விவசாயி தேவப்பா என்பவர் முதல் வேட்பாளராக, சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.கடந்த 19 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலையில்,3 நாட்களாக யாரும் மனு செய்ய வரவில்லை.நான்காவது நாளான இன்று, ஓசூர் சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த விவசாயி தேவப்பா என்பவர் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளரிடம் பேசிய தேவப்பா,தேர்தலில் வெற்றி பெற்றால்,விவசாயிகளுக்கு,ஒரு லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த உள்ளதாக கூறினார்

Next Story

மேலும் செய்திகள்