ரெங்கநாதர் கோயில் சேர்த்தி சேவை வைபவம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
ரெங்கநாதர் கோயிலில் ஊடலுக்கு பின் நம்பெருமாளையும் தாயாரையும் இணைக்கும் சேர்த்தி சேவை நடைபெற்றது
ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோயிலில் ஊடலுக்கு பின் நம்பெருமாளையும் தாயாரையும் இணைக்கும் சேர்த்தி சேவை நடைபெற்றது. பூலோகத்தில் நாச்சியார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நம்பெருமாள்அவருக்கு தமது மோதிரத்தை அணிவித்துவிட்டு திரும்பியதன் காரணமாக ரங்கநாயகி மற்றும் நம்பெருமாளுக்கு இடையே ஊடல் ஏற்பட்டது.இதனை நம்மாழ்வார் தீர்த்து வைக்கும் நிகழ்வே சேர்த்தி சேவை என்றழைக்கப்படுகிறது. இந்த வைபவத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
Next Story