திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்த வழக்கு - தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை, எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரிக்கப்பட்டு வந்தது.பின்னர் இந்த வழக்கு,சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நீதிபதிகள் மணிக்குமார்,சுப்பிரமணிய பிரசாத் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஜனவரி மாதம் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களை,தேர்தல் ஆணையம் தரப்பு விளக்கியது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
Next Story