மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது

மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது
x

சென்னை வடபழனியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஜீனத் என்பவர் நடந்து சென்ற போது, ஆட்டோவில் வந்த 2 பெண்கள் ஜீனத்திடம் பேச்சு கொடுத்து 6 சவரன் நகையை திருடி சென்றுள்ளனர்.அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில் சென்னையில் பல்வேறு இடங்களில் மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடும் மதுரையைச் சேர்ந்த முத்தம்மாள்,முத்துமாரி மற்றும் மீனா குறித்து தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று கோயம்பேடு அருகே திருட்டு நகைகளை விற்பதற்காக அவர்கள் வந்தபோது,முத்தம்மாள் மற்றும் முத்துமாரியை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 19 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள மீனாவை போலீசார் தேடி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்