எருது விடும் விழா - சீறி பாய்ந்த காளைகள்

காளை முட்டியதில் ஒருவர் பலி - 20 பேர் படுகாயம்
எருது விடும் விழா - சீறி பாய்ந்த காளைகள்
x
வேலூர் மாவட்டம்,  வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.   இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு ஓடின.குறைந்த நேரத்தில் ஓடி இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியின் போது காளை முட்டியதில் கல்லறைபட்டியை சேர்ந்த வெள்ளையன் என்பவர் உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்