வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் - மூர்த்தீஸ்வரபுரம் மக்கள்

மூர்த்தீஸ்வரபுரம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி அப்பகுதி மக்கள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் மூர்த்தீஸ்வரபுரம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி அப்பகுதி மக்கள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோர் வசிக்கும் மூர்த்தீஸ்வரபுரம் கிராமத்தில் இருந்த வாக்குச்சாவடி மையம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியசாமிபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கிராமத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் அதிக அளவில் உள்ளதை கருத்தில் கொண்டு அரசு, மூர்த்தீஸ்வரபுரம் கிராமத்தில் புதிய வாக்குச்சாவடி மையம் அமைத்திட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்