மகளைக் கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தத் தாய்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெருவில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி.
மகளைக் கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தத் தாய்
x
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெருவில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் இறந்துவிட்ட நிலையில், மனவளர்ச்சி குன்றிய மகள் கோகிலாவுடன் வசித்து வருகிறார்.  கோகிலாவுக்கு 21 வயதான பின்பும் மனவளர்ச்சி இல்லாமல், சிறு குழந்தை போல் நடந்து கொள்கிறார். இந்த நிலையில்  ராஜேஸ்வரிக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வயிற்றில் கட்டி இருந்து அறுவை சிகிச்சை  மூலம் அகற்றப்பட்டதால், முன்பு போல வேலைகளைச் செய்ய முடியவில்லை. இதனால் மனவளர்ச்சி குன்றிய மகளை பராமரிக்க முடியாமல் பரிதவித்து வரும் அவர், பல்வேறு மட்டத்திலான கோரிக்கைகளுக்கு பின்னர் கோகிலாவை கருணை கொலை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்