கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கொல்ல முயற்சி : சுற்றி வளைத்த மாணவர்கள்

திண்டிவனம் அருகே காதலை ஏற்க மறுத்த மாணவியை இளைஞர் ஒருவர் கல்லூரிக்குள் புகுந்து வெட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கொல்ல முயற்சி : சுற்றி வளைத்த மாணவர்கள்
x
திண்டிவனத்தை அடுத்த கோனேரிகுப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவியை, அந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் சந்தோஷ்குமார் ஒருதலையாக காதலித்து வந்த‌தாக கூறப்படுகிறது. ஆனால் சந்தோஷ்குமாரின் காதலை ஏற்க மாணவி  தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆந்திராவிற்கு சென்று சட்டக்கல்லூரியில் படித்துவரும் சந்தோஷ்குமார், கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் மாணவியிடம் தனது காதலை  வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அவர் மீண்டும் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. ஆத்திரமடைந்த சந்தோஷ், மாணவியை கொல்ல அரிவாளுடன் கல்லூரிக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அவரை கண்டு மாணவி கூச்சலிடவே, சக மாணவர்கள் சந்தோஷ்குமாரை கட்டுபடுத்த முயற்சித்துள்ளனர். அப்போது, சந்தோஷ் வெட்டியதில் அருண்பாண்டியன் என்ற மாணவருக்கு கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சக மாணவர்கள் சந்தோஷை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்