அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த தமிழக வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
x
பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த தமிழக வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். பாகிஸ்தானின் பிடியிலிருந்த போது அசாத்திய துணிச்சலுடன் அதை எதிர்கொண்ட அபிநந்தன் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருதை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்