முகிலனை மீட்க கோரிய வழக்கு : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்த வீடியோ ஆதாரங்களை வெளியிட்டிருந்த முகிலனை கடந்த 16ம் தேதிக்கு பிறகு காணவில்லை.
முகிலனை மீட்க கோரிய வழக்கு : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்த வீடியோ ஆதாரங்களை வெளியிட்டிருந்த முகிலனை கடந்த 16ம் தேதிக்கு பிறகு காணவில்லை. இதையடுத்து, அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முகிலன் மாயமானது தொடர்பாக இதுவரை 148 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக மார்ச் 18 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி'க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்