அபிநந்தன் மீண்டும் விமானத்தை இயக்குவாரா..? - விமானப்படை முதன்மை தளபதி விளக்கம்

அபிநந்தன் விமானத்தை மீண்டும் இயக்குவாரா என்பது குறித்து உரிய மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே தெரிய வரும் என இந்திய விமானப்படையின் முதன்மை தளபதி தெரிவித்தார்.
x
கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படையின் முதன்மை தளபதி பிரேந்தர் சிங் தனோவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை நாங்கள் குறிவைத்து தாக்கினோம் என்றார். எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்து தெரியாது என்றும், இதுகுறித்து வெளியுறவுத்துறை விரிவாக விளக்கம் அளித்துள்ளது என்றார். விமானப்படையில் புதிதாக விமானங்கள் சேர்ப்பது குறித்து புதிதாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும், அவை அனைத்தும் விரைவில் சேர்க்கப்படும் என்றார். மேலும் அபிநந்தன் மீண்டும் விமானத்தை இயக்குவாரா? என்பது குறித்து உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என்றார். மேலும் எல்லையில் தற்போது நடைபெறும் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றும் தனோவா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்