" பூமிக்கு அடியில் மின் கம்பிகளை அமைக்க வேண்டும் " - பி.ஆர்.பாண்டியன்

விவசாய நிலங்களில், உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக, பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
 பூமிக்கு அடியில் மின் கம்பிகளை அமைக்க வேண்டும்  - பி.ஆர்.பாண்டியன்
x
விவசாய நிலங்களில், உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக, பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார். விவசாய பிரச்சினைகளும் தீர்வுகளும் என்ற  தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,  விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வரமாட்டேன் என ஜெயலலிதா உறுதியளித்ததாகவும், ஆனால் தற்போது மின் கோபுர திட்டம் போன்றவற்றை செயல்படுத்த முயற்சி நடப்பதாகவும் பி.ஆர்.பாண்டியன் குறிப்பிட்டார். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்