தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை - பன்னீர்செல்வம்

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
x
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க.  புதிய தமிழகம் கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில், தே.மு.தி.க இணைவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக இளங்கோவன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் அடங்கிய தேமுதிக தொகுதி 
பங்கீட்டு குழுவுடன் விஜயகாந்த் இன்று இரண்டாவது நாளாக முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது தொடர்பாக ஓரிரு நாளில் நல்ல முடிவு வெளியாகும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்