காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் மோதல்

திண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டதோடு ஒருவருக்கு தர்ம அடி விழுந்தது
x
திண்டுக்கலில், காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத், செயல் தலைவர் வசந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தொண்டர்களிடையே திடீரென கடும் மோதல் ஏற்பட்டது. மேடையில் இருந்த தலைவர்களை பார்த்து தொண்டர்கள் சிலர் சரமாரியாக கேள்வி கேட்டனர்.  அப்போது, நிர்வாகி ஒருவர் தொண்டர் ஒருவரை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.   தொண்டர்களை மூத்த நிர்வாகிகள் சமாதானம் செய்ததை தொடர்ந்து கூச்சல் குழப்பம் முடிவுக்கு வந்தது.


Next Story

மேலும் செய்திகள்