அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்
மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு அப்பகுதி மக்கள் சார்பாக கல்வி சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு அப்பகுதி மக்கள் சார்பாக கல்வி சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பிரிண்டர், பிரோ, சேர், மைக்செட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஊரின் மையப்பகுதியில் இருந்து ஊர்வலமாக தரை தப்பட்டை முழங்க பள்ளிக்கு எடுத்து வந்தனர்.
Next Story