தமிழக அரசின் முட்டை கொள் முதல் அரசாணை 57 ரத்து...

தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்ட முட்டை கொள் முதல் அரசாணை 57 - ஐ ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
x
முட்டை கொள் முதல் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி, தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு மீது இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி மகாதேவன் தமது உத்தரவில், 
அரசாணை முறையாக இல்லை என்றும் பல்வேறு பாகுபாடுகள் உள்ளதாகவும் கூறி, அதனை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். முட்டை வழங்குவதில் பாதிப்பு இல்லாத வகையில், இது வரை யார் முட்டை வழங்கி வருகிறார்களோ அவர்களிடம் அதே விலையில் அதே எண்ணிக்கையில் முட்டை வாங்கலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்