திருச்சி வங்கி கொள்ளை : கொள்ளையர்களை நெருங்க முடியாமல் போலீஸ் திணறல்

திருச்சி அருகே வங்கியின் லாக்கரை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்
திருச்சி வங்கி கொள்ளை : கொள்ளையர்களை நெருங்க முடியாமல் போலீஸ் திணறல்
x
திருச்சி அருகே வங்கியின் லாக்கரை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சமயபுரம் பகுதியில் உள்ள வங்கியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கப்பணம், ஆவணங்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் 7 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்னும் கொள்ளையர்கள் பிடிபடவில்லை. தேர்தல் பணிகளுக்காக காவல்துறையினர் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருவதால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்