4 நாட்களாக ஆட்டம் காட்டும் சின்னதம்பி யானை : கும்கி யானைகளுடன் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணாடிபுத்தூர் பகுதியில் நான்கு நாட்களுக்கும் மேலாக சின்னத்தம்பி யானை முகாமிட்டுள்ளது.
4 நாட்களாக ஆட்டம் காட்டும் சின்னதம்பி யானை : கும்கி யானைகளுடன் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பு
x
யானையை விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கும்கி யானைகளை வரவழைத்தும் சின்னத்தம்பி யானையை விரட்ட முடியவில்லை. யானையை, விரட்டவும் முடியாமல், பிடிக்கவும் முடியாமல் வனத்துறையினர் பின் தொடர்ந்து வருகின்றனர். இதனையடுத்து யானையை கும்கி யானையாக மாற்ற வனத்துறையினர் முடிவெடுத்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாக தமிழக அரசு கால அவகாசம் கோரியதால், வழக்கு நாளை விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே தீர்ப்பு வரும் வரை ஏதும் செய்ய முடியாமல் வனத்துறையினர் கும்கி யானைகளுடன் சின்னத்தம்பியை பின் தொடர்ந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்