புதுக்கோட்டை: சீறிபாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில், சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.
x
புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில், சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர். தென்னலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 600-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 325 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகளில் பல, வீரர்களின் பிடியில் சிக்காமல், அவர்களை பதம்பார்த்தன.

Next Story

மேலும் செய்திகள்