பிளாஸ்டிக் தடை - மக்கள் மத்தியில் வரவேற்பு : அமைச்சர் கே.சி கருப்பணன்...

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்திருப்பதாக அமைச்சர் கே.சி கருப்பணன் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் தடை - மக்கள் மத்தியில் வரவேற்பு : அமைச்சர் கே.சி கருப்பணன்...
x
பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு, சென்னை லயோலா கல்லூரியில் தொடங்கியது. இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்திருப்பதாகவும், பால் பாக்கெட்டுகளுக்கு மாற்று பொருள் கிடைக்கிற பட்சத்தில், அதற்கும் விரைவில் தடை செய்யப்படும் என்றார். ஸ்டெர்லைட் ஆலை திறக்கக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்