மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை? - அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
தமிழகத்தில், இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில், இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மணப்பாறை வழக்கறிஞர் சங்க செயலர் செல்வராஜ் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் மதுவுக்கு அடிமையானவர்கள் தமிழகத்தில் அதிகம் என்பதால், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரை எதிர்மனுதாரராக சேர்ப்பதாக உத்தரவிட்டனர். மேலும், அடுத்தகட்டமாக எத்தனை டாஸ்மாக் கடைகள், எப்போது மூடப்படவுள்ளன? என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story