சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து : தூங்கிக் கொண்டிருந்தவர் உயிரிழந்த பரிதாபம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து, வீடு தீப்பற்றி எரிந்ததில் பெண் உடல் கருகி உயிரிழந்தார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து : தூங்கிக் கொண்டிருந்தவர் உயிரிழந்த பரிதாபம்
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து, வீடு தீப்பற்றி எரிந்ததில் பெண் உடல் கருகி உயிரிழந்தார். பொன்னேரி அடுத்த பூதூர் கிராமத்தை சேர்ந்த பிரமிளா, தனது மகனுடன் வசித்து வந்தார். நேற்று இரவு மகன் வேலைக்கு சென்ற நிலையில், இன்று அதிகாலை திடீரென்று சிலிண்டர் வெடித்ததில்,வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரமிளா உடல் கருகி உயிரிழந்தார். இதில் வீடு முழுவதும் தீப் பற்றி எரிந்ததில், வீட்டுப் பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின. 

Next Story

மேலும் செய்திகள்