கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு : 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு : 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
x
கடந்த 2017-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில் 11 பேர் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். இவ்வழக்கு தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, சயான், ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், சதீசன், வாளையார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். குற்றம் சட்டப்பட்ட 10 பேரில் 9 பேர் இன்று உதகை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்