குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முன்னேற்பாடு - கடம்பூர் ராஜூ

தமிழகத்தில், கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, 150 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி, திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
x
தமிழகத்தில், கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, 150 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி, திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கோடாங்கால் மற்றும் கடம்பூர் பகுதியில் சாலைப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் பல்வேறு பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதற்கான பணிகளை தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்