திட்டங்கள் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டத்தில், மொத்தம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூன்று பாலங்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார்.
x
சேலம் மாவட்டத்தில், மொத்தம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூன்று பாலங்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார். அடிக்கல் நாட்டிய பிறகு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, மக்களிடம் அதிமுக அரசு அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். சேலம் மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே பாலங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் தூங்கும் போது கூட, தம்மை பற்றியும், அதிமுக ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சி செய்து போராட்டங்களை தூண்டி வருவதாக புகார் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்