கார் கண்ணாடியை உடைத்து ரூ.1.70 லட்சம் கொள்ளை

சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை
கார் கண்ணாடியை உடைத்து ரூ.1.70 லட்சம் கொள்ளை
x
ஒசூரில் மூர்த்தி என்பவர், வங்கியில் இருந்து எடுத்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை காரின் முன் இருக்கையில் வைத்துவிட்டு அருகே இருந்த கடைக்கு சென்றுள்ளார். பின்னர் மூர்த்தி திரும்பி வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. பின்னர் மூர்த்தி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்