ராணுவ கனவு நிராசையானதால் ராணுவத்திற்கு உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞர்

தூத்துக்குடி அருகே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தமது கனவு நிராசையானதால், இளைஞர் ஒருவர் ராணுவத்திற்கு உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்
x
சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். 56 வயதாகும் இவரது தந்தை சுதந்திரப்போராட்ட தியாகி. இதனால் நாட்டுபற்றில் அக்கறை கொண்டு இளம் வயதிலேயே ராணுவத்தில் சேர சுந்தரம் ஆசைப்பட்டுள்ளார். குடும்ப சூழ்நிலையால் அவரது கனவு நிராசையானதால், தற்போது தனது உடல் உறுப்புகளை ராணுவத்திற்கு தானம் செய்துள்ளார். கொடிநாள் நிதிக்காக 5 ஆயிரம் ரூபாய் நன்கொடையும் சுந்தரம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்