கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சயான், மனோஜ் மனு வாபஸ்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் ஆகியோருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸார் தொடர்ந்த மனு மீதான விசாரணைக்காக நாளை நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் உதகை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சயான், மனோஜ் மனு வாபஸ்
x
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் ஆகியோருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி, போலீஸார் தொடர்ந்த மனு மீதான விசாரணைக்காக நாளை நேரில் ஆஜராகும்படி, இருவருக்கும் உதகை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஏற்கனவே 20 முறைக்கு மேல் இந்த வழக்கிற்காக ஆஜராகியுள்ளதால் சம்மனை ரத்து செய்யக்கோரி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், உதகை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர்கள் மனுவை வாபஸ் பெற்று கொண்டதால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்