குடியரசு தின இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை
குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை சாலையில் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
நாடு முழுவதும் நாளை மறுதினம் 70-வது குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சென்னை மெரினாகடற்கரையில் நடந்தது. ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர், காவல்படை இசைப்பிரிவினர் ஆகியோர் பங்கேற்றனர். அதை தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடியரசு தினத்தன்று தாங்கள் நடனமாட உள்ள பாடலுக்கு சிறப்பாக நடனமாடி அவர்கள் ஒத்திகை பார்த்தனர்.
Next Story