விடுதலைப்புலிகள் தப்பிய வழக்கு : "சிறை வார்டன்களை விடுதலை செய்தது செல்லும்" - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை சிறையில் இருந்து விடுதலைப் புலிகள் தப்பிய வழக்கில் சிறை வார்டன்களை விடுவித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் தப்பிய வழக்கு : சிறை வார்டன்களை விடுதலை செய்தது செல்லும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
x
கடந்த 1995 ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி, சென்னை மத்திய சிறையில் இருந்து,  விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த 5 பேர் தப்பி இலங்கை சென்றனர். இந்த வழக்கில், தப்பிச் செல்ல உதவியதாக சிறை வார்டன்கள் நான்கு பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்து, 2002ம் ஆண்டில், சென்னை முதலாவது விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், கியூ பிரிவு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது என கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்