மைக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து காவலர்...

சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் மைக் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சில விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.
x
சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் போக்குவரத்து சீர் செய்யும் பணியின்போது, மைக் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சில விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். மணிகண்டன் என்பவர், சேலம் மாநகர போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். தலைக்கவசம் குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, அவர் புதிய யுக்தியை கையாண்டுள்ளார். உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, காதில் பொருந்தும் அளவிற்கு சிறிய ரக மைக்கை பயன்படுத்தி, வாகன ஓட்டிகளுக்கு மணிகண்டன் அறிவுரை வழங்கி வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்