கொடநாடு விவகாரம் - முதல்வர் மீது வீண் பழி போட பணம் கைமாறியுள்ளது - செல்லூர் ராஜூ

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பழி போட பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பழி போட பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற எம்.ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, பணம் கைமாறியதற்கான ஆதாரங்கள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என தெரிவித்தார். இதுவரை 22 முறை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள சயன் மற்றும் மனோஜ், ஒருமுறை கூட ஏன் முதலமைச்சரை குறித்து பேசவில்லை எனவும் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்