கஜா புயல் நிவாரணத்திற்கான கணக்கெடுப்பில் குளறுபடி : வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கஜா புயல் நிவாரணத்திற்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி உள்ளதாக கூறி, வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கஜா புயல் நிவாரணத்திற்கான கணக்கெடுப்பில் குளறுபடி : வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கஜா புயல் நிவாரணத்திற்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி உள்ளதாக கூறி, வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கஜா புயலால் கிராமம் முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில், 41 குடும்பங்களுக்கு மட்டுமே அரசின் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய மக்கள், வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர். மனு குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்