ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு : 2 பேரை, 6 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கேரளாவில் இருந்து கோவைக்கு தனியார் நகை கடைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான 2 பேரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு : 2 பேரை, 6 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
x
கேரளாவில் இருந்து கோவைக்கு தனியார் நகை கடைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான 2 பேரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த 7 ஆம் தேதி நடந்த இந்த கொள்ளை தொடர்பாக குற்றவாளிகளை அமைக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் தமிழ்செல்வன்  சென்னையில் கைது செய்யப்பட்டனர். தனிப்படை போலீசார், 2 பேரையும் கோவை 7-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரிய நிலையில், 6 நாள் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்